மே 06-07
திண்ணையில் என் நண்பர் தன்முனைப்பு பேச்சாளர் கண்டனூர் சசிகுமாரின் கட்டுரையை படித்துவிட்டு திரு ஜடாயு அவர்கள் திண்ணை இணையத்தின் வழியே தனது நன்றி கடிதத்தை எழுதியிருந்தார். என் நண்பனிடம் கேட்டதற்கு இதற்காகவாவது நாம் எழுதவேண்டும் என்றான்.
திரு. ஜடாயு அவர்களுக்கு என் நண்பன் சார்பாகவும் எனது நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன்.
திண்ணையில் நான் எழுதிய சிவாஜி ஓர் பார்வை எனும் கட்டுரையும் அலைகளின் விளிம்பில் எனும் கவிதையும் வெளிவந்துள்ளது.
___________________
என் நண்பர் இனியதாசன் சிங்கப்பூரில் 14.04.07 அன்று திரு சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தை அவரது பார்வையில் பதிவு செய்திருந்தார். உங்களுக்காக அதன் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
என் நண்பன் இனியதாசன் பற்றிய ஒரு சுவையான தகவல். இவர் 10க்கும் மேற்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தானே இயற்றி மெட்டமைத்து இங்கு நடைபெறும் நிகழ்வுகளில் தனது இனிய குரலாலே பாடிவருகிறார். அனைத்துபாடலும் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கு அழைத்து செல்பவை.
|