இனி ஆரம்பம்
  கதை தொடர்ச்சி- 2
 

முன்னா சொன்னான்மாப்ஸ் இப்ப ஏன் டென்சன் ஆகுற. தினமுமா அவன் குடிக்கிறான் இந்த மாதிரி நம்ம கூட சேரும்போது மட்டும்தான். அவனுக்கு இதுதான்டா புடிச்சிருக்குஎன்றபோதும் என் மனம் ஒப்பவில்லை..

பேரருக்கு வேலை வைக்காமல் எல்லாம் முன்னாவே சுத்தம் செய்தான்.

  அவன் சட்டையை முதலில் மாற்று என்று சுப்பு அவளோட கோட்டை கழட்டிக்குடுத்தா. முகத்தில் கொஞ்சமும் சுருக்கம் இல்லை.

  

  நான் போற வழிதான் கௌ-காங்கில் நான் விட்டுவிடுகிறேன் என்று கேத்ரீனா சொன்னாள்.

  

  முன்னா கேட்கவில்லை.பிறகு நானும் கூட போனேன். காரில் சென்றபோது முன்னா கேட்டான்என்ன மாப்ஸ் தமிழ் முரசுவிற்கு போனவாரம் கவிதை அனுப்பினியே வந்திருச்சா என்றான்”  வழக்கம்போல் உதட்டை பிதுக்கினேன்.

  

  முயற்சி பண்ணு இல்லைனா நாமளே அச்சடிச்சு தேக்காவில் குடுத்திரலாம் என்று கூறிச் சிரித்தபோது,ஏதோ ஒன்று மனதை அழுத்திச் சென்றதாய் உணர்ந்தேன்.                                                                                                          

      சுகாங் இன்னமும் ச்சீ என்று குழந்தைபோல கேத்ரீனாவின் மடியில் முனகிக்கொண்டிருந்தான். அவளின் கை அவனின் முடியை கோதிக்கொண்டிருந்தது.

  

  உன்னோட பிளாக் எப்டியிருக்கு என்று கேட்டாள். கேத்ரீனா .

  

  ம். நிறைய பேர் வருகிறார்கள் சிலர் கருத்தை சொல்கின்றனர் என்றேன்.                 
       
அவளின் பல்வேறு வேலைகளுக்கிடையிலும் வலைதளத்தை அறிமுகப்படுத்தி  வடிவமைப்பில் எனக்கு உதவுகிறாள் என்பதை எண்ணியபோது பெருமையாய் இருந்தது.

  

  சுக்காங் வீடு வந்தடைந்தோம். ஆனால் ,காரை விட்டு இரண்டு பேரால் அவனை தூக்கமுடியவில்லைஒரு பியருக்கே நான் மிதக்க ஆரம்பித்திருந்தேன். முன்னா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தான்நாங்க படும் கஷ்டத்தை பார்த்துவிட்டு டிரைவர், “விடுங்க தம்பி நான் தூக்கிவந்து விடுறேன்”, என்றார்.        


     
ஐம்பது வயது இருக்க வேண்டும் அனாசையாக தூக்கிவந்து லிப்டில் கொண்டுவந்து விட்டார்.நன்றி கூறினோம் .

           முதலில் முன்னாவிற்கு பறக்கும் முத்தம், பின் என்னிடம்  கண்களால் பேசிவிட்டு , அதே காரில் விடைபெற்றாள் கேத்ரீனா.

  

  சுக்காய் வீட்டில் அவரோட தாத்தா மட்டுமிருந்தார்அம்மா வேலைக்குப் போய்விட்டார். அப்பா இப்ப இல்லை.ஏன்னா வேற ஒரு வாழ்க்கைத்துணையுடன் வாழ்கிறார்.                                                                
      
எனக்கு சற்று அங்கே இருக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என்னை புரிந்துகொண்டிருக்க வேண்டும், முன்னா விசில் அடித்துகொண்டே விஜய் டிவியில் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.   

                                                   
     
தாத்தா சுக்காங்கை நன்றாகவே புரிந்துவைத்துள்ளார்.  தாத்தா சுக்காயின் சட்டை பேன்ட் எல்லாம் கழற்றிவிட்டு வெந்நீர் வைத்து குளிக்கவைத்து பின் கொஞ்சமாக சாப்பிடவைத்தார் .அவனுக்கு இது எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என என்ணியது என் மனம்.

கதை தொடர்ச்சி- 3

 
  Today, there have been 3 visitatori (67 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free