நான் பூபதியுடன் நடந்து கல்லூரி வளாகத்தை நெருங்கிய தருணத்தில் பூபதி அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அழுகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவன் அழுது இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை.
அவனை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு மாற்றி விபரத்தை கேட்டபோது அவன் உயர்நிலை பள்ளி நாட்களில் இருந்து உயிருக்குயிராய் நேசித்த ஆர்த்தியிடம் அவனது கவிதை புத்தகத்தை கொடுத்திருக்கிறான். அவள் அதை கிழித்தெறிந்திருக்கிறாள். அதனை எதிர்பார்க்காத அவன் மனமுடைந்திருக்கிறான்.
பூபதியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவனது விருப்பங்கள் வெறுப்பு என்னவென்பதும். அவனது கவிதையாற்றலும். ஆமாம், அவனது எல்லா கவிதையிலிலும் ஆர்த்தி பற்றிய வார்த்தைகள் இல்லாமல் இருக்காது.
ஆர்த்தி அவனோட முதல் காதலி. அப்படி என்று தான் நினைக்கிறேன். ஆனால் முதன் முதலில் பூபதியை ஆர்த்தி வீட்டுக்கு அழைத்து சென்றது நான் தான். அதான் அவன் அந்த வீட்டை மிதிச்ச கடைசி நாளாகவும் இருக்கனும்.
அன்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடச் சென்றபோது வாடா ஆர்த்திவீடு இங்கதான் இருக்கு அந்த பக்கம் போய் வரலாம் என்றான்.
நானும் மறுப்பேதும் சொல்லாமல் வண்டியை செலுத்தினேன். ஆனால் அந்த தெருவில் கடைசியாய் உள்ளதுதான் ஆர்த்தி வீடு. போய் திரும்பும் போது அந்த வீட்டில் யாராவது பார்க்க நேரும் என்று திரும்ப நினைத்தேன்.
பூபதியோ போகவேண்டும் என்று அடம்பிடித்தான். சரி என்று அவள் வீட்டுக்கு வண்டியை செலுத்தினேன். என் சிறுவயது குடும்ப நண்பர்கள் தான் ஆர்த்தியின் பெற்றோர்கள். என் அப்பாவோட வேலை மாற்றம் காரணமாக வேறு ஊர்களில் இருந்துவிட்டு அப்பொழுதான் அங்கு வந்திருந்தோம்.
அந்நேரத்தில் ஆர்த்திதான் வீட்ல இருந்தா. அவளுக்கு பூபதியை தெரியாதது மாதிரி நான் தான் அறிமுகபடுத்தினேன். அவளும் அன்போடு வரவேற்றாள். அந்த நேரத்தில் ஆர்த்தி என்னை பற்றி என்ன நினைச்சிருப்பாள்? !
என்று எண்ணிய மனதில் ஏதோ உறுத்தல் தொடங்கிய நேரத்தில் பூபதியின் அழுகை சத்தம் என்னை நிகழ்காலத்தை உணர்த்தியது.
ஒரு பெண்ணுக்காக இந்த அளவு அழுது நான் யாரையும் பார்த்ததில்லை.