அப்ப நான் நினைப்பேன் ஆர்த்திக்காக அன்னைக்கு அப்படி அழுதானே இப்ப இன்று என்னை அழுக விடுறானேனு. ஏன்னா இது என் முதல் காதல். எது அப்படி அவனை மறக்கடிச்சுதுனு தெரியலை.மேலும் மேலும் என் நெஞ்சை புண்ணாக்கிக் கொள்ள விரும்பாத நான் கொஞ்சம் கொஞ்சமா அவள் பார்வையில் இருந்து விருப்பம்மின்றி விலக ஆரம்பித்தேன்.
கல்லூரி வாழ்வு கனவு போல முடிந்தது. பணி நிமித்தம் பெங்களுர் சென்று விட்டேன். பூபதியடம் மட்டும் தொடர்பு இருந்தது. பூபதியும் அந்த பெண்ணும் பிரிந்துவிட்டதாகவும் அவன் இப்ப் வேறு பெண்ணை விரும்புவதாகவும் எனக்கு தகவல் வந்தது.
என் அக்கா திருமணத்தின் போதுதான் நான் விரும்பிய பெண்ணை கடைசியாக பார்த்தேன். அக்காவுடன் பணிபுரிவதால் வந்திருந்தனர். அக்கா சொல்லித்தான் தெரியும் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது.
எட்டு மாதிற்கு முன் சென்னை வர வேண்டியிருந்தது அப்ப பூபதியை சந்தித்தேன். தற்போது ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணையே திருமணம் செய்யவிருப்பதாகவும் சொன்னான். நான் என்னை மறந்து சிரித்தேன். இல்லைடா இது சரியான நேரத்துக்கு வந்த காதல் என்னையும் என் வேலையையும் நல்லா புரிஞ்கிட்டிருக்கா என்றான்.
மறுநாள் நானும் பூபதியும் சந்திப்பதாக இருந்தது.
அதற்குள் அவனிடமிருந்து போன் வந்தது. பரோடாவில் இருந்து நண்பர் ஒருவர் வருகிறார் அவரை பார்க்க போய்விட்டு படத்துக்கு போகிறேன் என்றான்.
மறு நாள் சைதாப்பேட்டை சென்றிருந்தேன். இயில்நிலையத்தில் ஏதேச்சையாக பூபதியை பார்க்க நேர்ந்தது. அவனும் ஒரு பெண்ணும் நின்றுகொண்டு சிரிச்சி பேசிகிட்டிருந்தாங்க ஒருவேளை அவன் விரும்பிய பெண்ணாகயிருக்கலாம். ஒரு இரண்டு நிமிடம் நின்னு பார்த்தேன் அப்புறம் அவன் கைத்தொலைபேசிச்கு போன்பண்ணி துண்டிக்கலாம்னு பார்த்தேன் ஆனா பண்ணலை அவனை கடந்து போக ஆரம்பிசேன் . அவங்க இரண்டு பேருக்கும் அவங்களை சுற்றி என்ன நடக்குதுனு தெரியாம இருந்தாங்க.
ஒரு மாசத்துக்கு முன்னாடி போன் செய்திருந்தேன் அம்மா ஒததுக்க மாட்டாங்க பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு போய் அவங்க காலில் விழுந்திரவேண்டியதுதான் என்றான்.
பூபதி காதல் தொடர்ந்த வண்ணமிருக்கு இன்னமும் திருமணம் மட்டும் ஆகவில்லை .
முதல்காதல் முள்ளுமாதிரி குத்திக்கிட்டே இருக்கும்பாங்கல!
சரி இந்த நான் யார்?;
இந்த நான் உங்களில் ஒருவராககவும் இருக்கலாம் . என்னை போல கதையெழுதவும் ஆரம்பிக்லாம்.
காதலுடன்: பாண்டித்துரை
|